இன்ஸ்டகிராம் வலைத்தளம் மூலம் விரைவில் குறுந்தகவல் அனுப்பும் சேவை ஆரம்பமாகவுள்ளது.
இன்ஸ்டகிராம் 2013 ஆம் ஆண்டு நேரடியாக செய்திகளை வழங்கும் முறையை அறிமுகம் செய்தது.
அதன்பின் மீண்டும் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அந்நிறுவனம் அதே சேவையை தனது வலைத்தளம் மூலம் அறிமுகப்படுத்தவுள்ளது.
இனிமேல் இன்ஸ்டகிராம் பயனர்கள் இன்ஸ்டகிராம் வலைத்தளத்தின் மூலம் நேரடியாக செய்திகளை அனுப்பவும், பகிரவும் அனுமதிக்கும் ஒரு பயன்பாட்டை சோதனை இடம்பெறவுள்ளது.
இந்த பயன்பாட்டை உலகெங்கிலும் உள்ள ஒரு சிறிய அளவிலான பயனர்கள் மட்டும் தற்போது பயன்படுத்திக்கொள்ளும் விதமாக சோதனை முறையில் கொண்டுவரவுள்ளது.
முழுமையான சோதனைக்குப் பிறகு எதிர்காலத்தில் இந்த அம்சத்தை அனைத்து பயனர்களும் பயன்படுத்தும் விதத்தில் மாற்றி அமைக்கவும் முடிவு செய்துள்ளது.