19 மாவட்டங்களிலும் தற்காலிகமாக தளர்த்தப்பட்ட ஊரடங்கு

1556336828 curfew 2
1556336828 curfew 2

கொரோனா இடர் வலயங்கள் தவிர்ந்த ஏனைய 19 மாவட்டங்களிலும் காவல்துறை ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்பட்டது.

இந்த நிலையில், பிற்பகல் 4 மணிக்கு குறித்த பகுதிகளில் ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல் படுத்தப்படும்.

அந்த மாவட்டங்களில் இன்று பிற்பகல் 4 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 14 ஆம் திகதி செவ்வாய்கிழமை காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்பட்டு, அன்றைய தினம் மாலை 4 மணி முதல் மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.Advertisement

இதேவேளை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் மற்றும் ரத்தினபுரி மாவட்டத்தின் இரண்டு காவற்துறை பிரிவுகளில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றின் மூலம் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.