கவிஞரும் எழுத்தாளருமான மனுஷ்யபுத்திரன் கொரோனா உறுதி செய்யப்பட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று 4,549 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,56,369 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை இல்லாத அளவாக இன்று 5,106 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1,07,416 ஆக உயர்ந்துள்ளது.
இன்று 69 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,236 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாக கொரோனா தொற்று 4 ஆயிரத்தைக் கடந்து வருவது குறிப்பிடத்தக்கது.