உங்க குழந்தை சரியா தூங்கலயா அப்போ இத பலோவ் பண்ணுங்க

20191029 sleeping baby yawn asian unsplash

ஒரு குழந்தை வளருவதற்க்கு தாய்ப்பால் எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு குழந்தையின் தூக்கமும் முக்கியம்.

அந்த கால பெரியவர்கள் முதல் இன்றைய மருத்துவர்களும் இதை சொல்கிறார்கள்.

குழந்தைகள் அழாமல் தூங்குவதற்க்கு நாம் செய்ய வேண்டிய சில வழிமுறைகளை பற்றி பார்ப்போம்

  • தாயின் வயிற்றில் கருப்பை சூட்டில் வளரும் குழந்தை பிறந்த பிறகும் நாள் ஒன்றுக்கு 17 மணி நேரம் வரை தூங்க வேண்டும் என்கிறார்கள் குழந்தை நல மருத்துவர்கள்.
  • பிறந்த குழந்தை கருவறையிலிருந்த சூழலில் இருந்து புதிய சூழலை அனுபவிக்கும் போது அதிகமான கஷ்டத்தை அடையும். இந்த கஷ்டங்கள் குழந்தைக்கு நேராதவாறு ஆழ்ந்த தூக்கத்தைக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் குழந்தையின் வளர்ச்சியில் நல்ல முன்னேற்றங்கள் கிடைக்குமாம்.
  • முன்னோர்கள் காலத்தில் குழந்தை பிறந்ததும் ஒரே வாரத்தில் நல்ல தரமான பருத்தி புடைவையை தொட்டிலாகா கட்டி குழந்தையை படுக்க வைப்பார்கள். ஆனால் இந்த காலத்தில் குழந்தையை தூங்க வைப்பதர்கு மெத்தை போன்று இருக்கும் தொட்டிலில் தூங்க வைப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.
  • அதுமட்டுமல்லாமல் இன்றைய சமுதாயத்தில் குழந்தைகளுக்கு என்று கட்டில், சிறு தொட்டில், மெத்தை போன்றவற்றை பயன்படுத்துகிறார்கள். விலை மிக்க மெத்தை வகைகள் பயன்படுத்தினாலும் அவை குழந்தைக்கு ஆழ்ந்த தூக்கத்தை தருவது கிடையாது என்பதே உண்மை.

எது நல்லது?

குழந்தை தாயின் வயிற்றுக்குள் இருக்கும் போது சுருங்கிய நிலையில் இருக்குமாம். மேலும் குழந்தையின் முதுகு எலும்புகள் இலேசான வளைவுத்தன்மையைக் கொண்டிருக்கிறது. சுருண்டு கொண்டிருந்த குழந்தை வெளியில் வந்ததும் உடலை நீட்டி உறங்குவதற்கு சிரமப்படுமாம். குழந்தையின் முதுகெலும்பு மிருதுவானதாக இருக்கும் என்பதால் குழந்தையால் சமமாக தொட்டிலில் படுக்கவும் முடியாது.நவீன தொட்டில்களில் வசதிகள் இருந்தாலும் அவை உடலை இறுக்கி அணைத்தபடி இருக்காது என்பதால் மெத்தை, கட்டில், நவீன தொட்டில் போன்றவை குழந்தையின் தூக்கத்தை அதிகரிக்க செய்யாது. இதனால் குழந்தை சிணுங்கி கொண்டே இருக்கிறது. குழந்தை ஆரோக்கியம் நல்லா இருக்க வேண்டுமானால் துணியினால் கட்டும் தொட்டில் தான் மிகவும் சிறந்ததாகும்.வயிற்றில் சுருண்டிருந்த குழந்தையை தொட்டிலில் தூங்க வைக்கும் போது அம்மாவின் அணைப்பில் இருக்கும் உணர்வை குழந்தைகள் பெறுகின்றார்கள். கருப்பை கதகதப்பு தொட்டிலில் கிடைக்கும் என்பதால் குழந்தைகள் ஆழ்ந்து தூங்குகின்றது.

ஆழ்ந்த தூக்கம்

  • தொட்டில் கட்ட பயன்படுத்தும் துணி மெல்லிய துணியாக இருக்க வேண்டும். நல்ல இறுக்கமான உறுதியான கயிறில் கட்டி, இரவு நேரங்களில் அம்மா அருகிலேயே குழந்தையைப் படுக்க வைப்பது மிகவும் சிறந்தது. பிறந்த குழந்தை அடிக்கடி சிறுநீர் கழிப்பது வழக்கமாக இருக்கும்.
  • குழந்தையை துணி தொட்டிலில் உறங்க வைக்கும் போது மெல்லிய பருத்தி புடவை அல்லது துணி என்பதால் குழந்தையின் சிறுநீர் மெத்தை போல் அங்கேயே தங்காமல் கீழே வழிந்துவிடுகிறது.
  • உடனடியாக அந்த ஈரம் உலர்ந்துவிடவும் வாய்ப்புகள் உள்ளது. ஈரத்தைக் கண்டு குழந்தையின் துணியை மட்டும் மாற்றிவிட்டால் போதும்.
  • உத்தரத்தில் தொங்கும் தொட்டில் தரைக்கு மேலேயே இருக்கும் போது பூச்சிகள், எறும்புகள் போன்றவை அணுகாமல் இருக்கிறது. குழந்தைகள் புரண்டு படுத்தாலும் பாதிப்புகள் ஏற்படாது. அடக்கமான கதகதப்பும் அம்மாவின் அருகாமையும் துணி தொட்டிலில் மட்டுமே உண்டு என்பதால் அதிக நேர உறக்கம் கிடைக்கும்.
  • துணி தொட்டில் அடக்கமாக இருக்கும் என்பதால் வேறொரு துணி கொண்டு போர்த்த வேண்டியதில்லை. குழந்தையை மிதமாக ஆட்டி விடலாம்.
  • தொட்டிலின் நடுவில் தடுப்பு கட்டையை வைத்து குழந்தைக்கு காற்று வருவதையும் உறுதி செய்வது சிறந்தது.
  • குழந்தையின் தலைக்கு மட்டும் தலையணை வைக்காமல் ஒரு மெல்லிய டவலை மடித்து தலையணை போல் வைப்பது மிகவும் நல்லது.
  • இதனால் குழந்தை ஒவ்வாமையால் வாந்தி எடுத்தாலும் அவை மூக்குக்கு தலைக்கு ஏறாது. தரைக்கும் தூளிக்குமான இடைவெளி அதிகம் இல்லாமல் இருப்பது அவசியம்.
  • குழந்தை 5 மாதங்களில் நகர தொடங்கும் என்பதால் கீழே விழுந்துவிட வாய்ப்புண்டு. ஆகவே அந்த நேரங்களில் கவனமாக இருங்கள்.
  • குழந்தையைத் துணி தொட்டிலில் போட்டு தூங்க வைத்தால் தூக்கத்தைக் கெடுக்காது என்பதோடு குழந்தையின் ஆரோக்கியமும் சீராக இருக்குமாம்.