திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுப்பட்டவர் என கருதப்படும் ´அங்கொட லொக்கா´ இந்தியாவில் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் இந்திய பொலிஸ் குழுவுக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று ஏற்பட்டுள்ளது.
4 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் விசாரணைகளுடன் தொடர்புடைய 30 பேரைக் கொண்ட விசாரணைக் குழுவினர் சுயதனிமைப்படுத்தலுக்கு நேற்று (17) உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதனால் அங்கொட லொக்கா தொடர்பான விசாரணை மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணைகள் தாமதமாகும் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன