பாகிஸ்தானின், பஞ்சாப் மாகாணத்தில் ஷோர்கோட் நகரத்திற்கு அருகே பயிற்சி நடவடிக்கையின்போது மிராஜ் என்ற ஜெட் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பாகிஸ்தானிய செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
விபத்துக்கான காரணங்களை கண்டறிய விமானத் தலைமையகம் குழுவொன்றை அமைத்துள்ளது.
இந்த விபத்தினைத் தொடர்ந்து விமானி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதுடன், உயிர் சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை.
கடந்த ஜனவரி மாதம், மியான்வாலி மாவட்டத்தில் இடம்பெற்ற பயிற்சி நடவடிக்கையின்போது ஜெட் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் இரண்டு பாகிஸ்தான் விமானப் படையின் விமானிகள் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.