பிரிக்ஸ் நாடுகளின் உச்சிமாநாட்டை ஒத்திவைக்க முடிவு

6 it
6 it

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, வளர்ந்து வரும் நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ் நாடுகளின் உச்சிமாநாட்டை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் எதிர்வரும் ஜூலை 22ஆம் திகதி மற்றும் 23ஆம் திகதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டை நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது.

தற்போது உலக அளவில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ள கொரோனோ தாக்குதல் காரணமாக இந்த மாநாட்டை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் உறுப்பு நாடுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால் இந்த மாநாட்டை தள்ளி வைக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஏற்பாட்டுக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘குழுக்களின் மாநிலங்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள தொற்றுநோயியல் நிலைமையின் மேலும் வளர்ச்சியைப் பொறுத்து உச்சிமாநாட்டிற்கான புதிய திகதிகள் தீர்மானிக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்து அரசியல், பொருளாதாரம் மற்றும் இராணுவ ஒத்துழைப்புக்கான அமைப்பை ஏற்படுத்தி உள்ளன. இது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு என்று அழைக்கப்படுகிறது.