பிரிட்டனில் கடந்த 24 மணித்தியாலத்தில் 377 இறப்பு

jy
jy

பிரிட்டனில் கடந்த 24 மணித்தியாலத்தில் 377 இறப்புகள் பதிவாகி உள்ளதாக, கொரோனா வைரஸ் தொற்று அனர்த்தம் குறித்து, புள்ளிவிபரங்களை வெளியிட்டுவரும் உலக இணையம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் +412 ஆக இருந்த இறப்புகள் இன்று மீண்டும் 35ஆல் குறைந்துள்ளது. இந்த நிலையில் பிரிட்டனின் மொத்த மரணங்கள், 37,837 ஆக உயர்ந்துள்ளன. அத்துடன் புதிய தொற்றாளர்கள் +1,887 பேருடன் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 269,127 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, சுவிற்சலாந்தில் +2 இறப்புகளும், ஜேர்மனில் +19 இறப்புகளும், பெல்ஜியத்தில் +24 இறப்புகளும், நெதர்லந்தில் +32 இறப்புகளும், சுவீடனில் +46 இறப்புகளும், இத்தாலியில் 70 இறப்புகளும், ரஷ்யாவில் +174 இறப்புகளும், மறுபுறம் கனடாவில் +34 இறப்புகளும், மெக்ஸிக்கோவில் +463 இறப்புகளும், இந்தியாவில் +139 இறப்புகளும், இந்தோனேசியாவில் +23 இறப்புகளும் சில்லியில் 49 இறப்புகளும், பதிவாகி உள்ளன.

பிரிட்டன் நேரம் 17.16 மணி அளவில் வெளியான தகவலின்படி, அமெரிக்காவின் மொத்த இறப்புகள் 1லட்சத்தைக் கடந்து 102,526 ஆக உயர்ந்துள்ளன. தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,752,841 உயர்ந்துள்ளது.