ஜோர்ஜியாவில் நடந்த சோகம்: விமான விபத்தில் 5 பேர் பலி

8 adm
8 adm

அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் வில்லிஸ்டனைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், உறவினரின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக இண்டியானாவுக்கு நேற்று சிறிய ரக விமானத்தில் சென்றனர். அதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உள்ளிட்ட 4 பேர் மற்றும் பைலட் என மொத்தம் 5 பேர் பயணித்தனர்.

இந்த விமானம் ஜோர்ஜியா வான்பகுதியின் புத்னம் கவுண்டி மில்லட்வில்லே பகுதியில் சென்றபோது, திடீரென தீப்பற்றி எரிந்து தரையில் விழுந்து நொறுங்கியது. விபத்தில் விமானத்தில் இருந்த 5 பேரும் பலியாகினர்.

சிதறிய விமான பாகங்கள் அருகில் உள்ள வயல்வெளியில் கிடந்தன.

அந்த விமானம் வானில் சிறிது நேரம் வட்டமிட்டதாகவும் பின்னர் தீப்பிடித்து விழுந்ததாகவும் விபத்தை நேரில் பார்த்த கிராமவாசி ஒருவர் தெரிவித்தார்.