கடந்த 24 நாட்களாக தாய்லாந்தில் கொரோனா தொற்று இல்லை

i3 27 1
i3 27 1

தாய்லாந்தில் கடந்த 24 நாட்களில் யாரும் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்படவும் இல்லை. பலியாகவும் இல்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.


கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. நோய் பாதிப்பு அதிகமாக இருக்கும் நாடுகளில் அமெரிக்கா முன்னிலையில் உள்ளது. பல நாடுகளிலும் தொற்று நோயின் பாதிப்பு நாளுக்கு நாள், தொடர்ந்து கூடிக்கொண்டெ செல்கிறது. இந்நிலையில், தாய்லாந்தில் கடந்த 24 நாட்களாக புதிதாக பாதிப்புகள் மற்றும் பலியானவர்கள் என யாரும் இல்லை எனவும் நோயின் பாதிப்பு நாட்டில் சற்று குறைந்து வருவதாக சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கு முன்பாக கண்டறியப்பட்ட பல நோயாளிகள் வெளி நாடுகளில் இருந்து வந்து தனிமைப்படுத்தப் பட்டவர்களுக்கு உறுதிப்படுத்தப்பட்டது.