பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் (23) பேர் உயிரிழந்துள்ளனர்.
தென்மேற்கு டாக்காவில் புரிகங்கா ஆற்றில் படகு கவிழ்ந்த போது படகில் சுமார் (50) பயணிகள் இருந்ததாக தீயணைப்பு சேவை அதிகாரி தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் (06) பெண்கள் மற்றும் (03) குழந்தைகளும் உள்ளடங்குவதாகவும் சிலர் பாதுகாப்பாக கரைக்கு நீந்தி வந்தபோதும் பலரை காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரிவான உள்நாட்டு நீர்வழிகளைக் கொண்ட ஒரு தாழ்வான நாடான பங்களாதேஷில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான மக்கள் படகு விபத்துக்களில் உயிரிழப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.