உலகில் மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6 மில்லியனை கடந்தது.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி 60 இலட்சத்து 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
மேலும், இந்த கொடிய வைரஸ் தொற்றினால் 1 கோடியே 8 இலட்சத்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர கொரோனா வைரஸ் பெருந் தொற்றினால் 5 இலட்சத்து 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
உலகிலேயே கொரோனா வைரஸ் தொற்றினால் அதிக பாதிப்பினை கொண்ட நாடாக அமெரிக்கா விளங்குகின்றது.
அங்கு 27 இலட்சத்து 79 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளதோடு 1 இலட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக பிரேஸில், ரஷ்யா, இந்தியா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் உள்ளன.