இந்தியாவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்தைக் கடந்துள்ளது. அதற்கமைய பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 இலட்சத்து 5220 ஆக அதிகரித்துள்ளது.
அதேநேரம் இந்த நோய்த் தொற்றுக்கு இலக்காகி இதுவரையில் 17 ஆயிரத்து 848 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் இந்த வைரஸ் தொற்றிலிருந்து இதுவரையில் 3 இலட்சத்து 59 ஆயிரத்து 896 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
அதேநேரம் இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளான 2 இலட்சத்து 27 ஆயிரத்து 476 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 8 ஆயிரத்து 944 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை இந்த வைரஸ் தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களாக தொடர்ந்தும் மகராஷ்டிரா தமிழகம் ஆகியன உள்ளன.
மகராஷ்டிராவில் இந்த வைரஸ் காரணமாக இதுவரையில் ஒரு இலட்சத்து 74 ஆயிரத்து 761 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதுடன், 7 ஆயிரத்து 855 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேநேரம் தமிழகத்தில் 90 ஆயிரத்து 167 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதுடன், ஆயிரத்து 201 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.