பிரேசில் நாட்டு ஜனாதிபதி சயீர் பொல்சனாரூ (jair bolsonaro) கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொரேனா தொற்றுக்குள்ளான நாடுகளின் பட்டியலில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளதோடு அங்கு இதுவரையில் (1,628,283) பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து (1,072,229) நபர்கள் பூரண குணமடைந்துள்ள அதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளாகி (65,631) நபர்கள் மரணம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது அந்நாட்டின் ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமையானது அந்நாட்டு மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.