அசாம் மாநிலத்தில் வெள்ளப் பெருக்கால் 44பேர் உயிரிழப்பு!

கனமழை 720x450 1
கனமழை 720x450 1

அசாம் மாநிலத்தில் பெய்துவரும் கனமழையில் சிக்கி உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது.

குறித்த வெள்ளத்தால் 23 மாவட்டங்களில் உள்ள 13 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் உத்தர பிரதேசம் பீகாரில் கடந்த சில வாரமாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

இதன்காரணமாக பிரம்மபுத்திரா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன் மக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.