இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்தை கடந்துள்ளது.
இதற்கமைய நேற்றைய தினம் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 28498 பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் இன்று காலையில் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 553 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 23 727 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 571000 ஆயிரம் பேர் குணமடைந்து வெளியேறியுள்ளனர் எனவும் இந்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.