கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக குவைத் 31 நாடுகளுக்கான விமான சேவையினை சனிக்கிழமை முதல் மறு அறிவித்தல் வரும் வரை நிறுத்தி வைத்துள்ளது.
கொவிட் -19 வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் நாட்டின் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாக குவைத்தின் செய்தி நிறுவனமான குனா அறிக்கை தெரிவித்துள்ளது.
குவைத்தின் சுகாதார அமைச்சகம் சனிக்கிழமையன்று 491 புதிய கொரோனா தொற்றாளர்களை அடையாளம் கண்டுள்ள நிலையில் நாட்டின் மொத்த மொத்தம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 67,448 ஆக காணப்படுகிறது.
குவைத்தின் விமான போக்குவரத்து அதிகாரசபையின் அறிக்கையின்படி பின்வரும் நாடுகளுக்கான விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்திய ஈரான் பிரேஸில் கொலம்பியா ஆர்மினியா பங்களாதேஷ் சிரியா ஸ்பெய்ன் சிங்கப்பூர் பொசுனியா எர்செகோவினா இலங்கை ஈராக் மெக்ஸிகோ இந்தோனேஷியா சிலி பாகிஸ்தான் எகிப்து லெபனான் ஹொங்கொங் இத்தாலி வடக்கு மக்கெதோனியா மல்தோவா பனாமா பேரு செர்பியா மொண்டெனேகுரோ கொசோவோ