நாட்டின் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியினை சந்தித்துள்ளது என அந்நாட்டு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் பிபிசி செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.
அவர் இது குறித்து தெரிவிக்கையில்,
இந்தியாவின் பொருளாதாரத்தை அடுத்த வருடத்திற்குள் மீள கட்டியெழுப்புவதற்கு மூன்று துரித திட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவினை பிறப்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
மக்களின் வாழ்வாதாரத்திற்கு பாதுகாப்பளிப்பதற்கு நிதி நிவாரணங்கள் வழங்குவது உள்ளிட்ட மூன்று பிரதான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.