கொரோனா வைரஸ்க்கு எதிரான முதல் தடுப்பூசியை பதிவு செய்துள்ளது ரஷ்யா

1 22 jpg
1 22 jpg

உலகத்தின் கொரோனா வைரஸ்க்கு எதிரான முதல் தடுப்பூசியை பதிவு செய்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் செய்தி தொடர்பாளர் தரிக் ஜசரேவிக் ஜெனீவாவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸுக்கு எதிராக உலகமெங்கும் ஏறத்தாழ 165 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருவதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

இவற்றில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ‘கோவிஷீல்டு’ உள்ளிட்ட 6 தடுப்பூசிகள் மட்டும் பரிசோதனையின் இறுதிக்கட்டத்தில் உள்ளன.

கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக விளங்கும் ரஷ்யாவில் அந்த நாட்டின் இராணுவ அமைச்சகமும், கமலேயா தொற்றுநோயியல், நுண்ணுயிரியல் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமும் சேர்ந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளன.

இந்த தடுப்பூசி பரிசோதனைகளை வெற்றிகரமாக முடித்துக்கொண்டுள்ள நிலையில், விரைவில் பதிவு செய்யப்படும் என தகவல்கள் வெளிவந்தன. அதன்படி, அந்த தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தயாராகி பதிவு செய்யப்பட்டது.

இந்தத் தகவலை வெளியிட்ட ரஷ்ய அதிபர் புடின், கொரோனா தடுப்பூசிக்கு ‘ஸ்புட்னிக்-வி’ என பெயரிடப்பட்டுள்ளதாகவும் இது மிகவும் திறம்பட செய்படுகிறது என்றும் கூறினார்.

இது ஒரு நிலையான எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது என்பதோடு, இந்த தடுப்பூசியானது, தேவையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுவிட்டது என குறிப்பிட்டார்.

மேலும் இந்த தடுப்பூசி ஆற்றல் மிக்கது என்பது சோதனைகளில் நிரூபிக்கப்பட்டுள்ளதுடன், இது பாதுகாப்பானது என தெரிய வந்துள்ளதாகவும் அவர் அறிவித்திருந்தார்.

இதேவேளை, 3ஆவது கட்ட சோதனையை இன்று தொடங்க இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.