சுஜித்தின் மரணத்தை தொடர்ந்து விருது நகரில் இன்னுமொரு குழந்தை பலி..!

1 re
1 re

சுஜித்தின் மரணம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் இன்னுமொரு மரணம் இன்று காலை நிகழ்ந்துள்ளது.

சிவகாசி அருகே கோவில்பட்டியை சேர்ந்த 3 வயதான ருத்ரன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. குழந்தை ருத்ரன் தனது தாய் தந்தையுடன் அம்பத்தூர் ஒண்டிப்புலி நாயக்கனூரில் உள்ள தனது தாத்தா பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளது.

அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை நீண்ட நேரமாக காணவில்லையே என தேடியுள்ளனர். கூப்பிட்ட குரலுக்கு குழந்தையின் பதில் வராததாலும் பயந்து போன பெற்றோர் அருகில் உள்ள மழை நீர் சேகரிப்புத் தொட்டியை பார்த்துள்ளனர்.

அதற்குள் விழுந்து கிடந்த குழந்தையை வைத்தியசாலை எடுத்துச் சென்ற போது குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.