மீளப்பெறப்பட்ட புலிகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் !!

gunasegaran malesiya
gunasegaran malesiya

மலேசியாவில், தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் பி.குணசேகரனுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இரண்டு குற்றச்சாட்டுகளைக் கைவிட அரசாங்க சட்டத்தரணிகள் விண்ணப்பம் செய்திருந்த நிலையில் அதை சிரம்பான் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது குற்றச்சாட்டுகள் கைவிட்டுள்ளது.

இது குறித்து குணசேகரனின் சட்டத்தரணியும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராயர் வரவேற்றுள்ளார்.

அவர் குற்றச்சாட்டுகளை மீட்டுக்கொண்டதற்காக அரசாங்க சட்டத்தரணிகளுக்கு நன்றியினை தெரிவித்துள்ளதுடன் குணசேகரனுக்கு எதிராக மற்ற நீதிமன்றங்களில் பதிவாகி உள்ள குற்றச்சாட்டுகளும் கைவிடப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.