ஈரான் நாட்டில் இன்று அதிகாலை 2.20 மணியளவில் 5.9 ரிச்டர் அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தினால் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
நிலநடுக்கத்தினால் அப்பகுதியில் இருந்த கட்டிடங்கள் சில இடிந்து விழுந்துள்ளன. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர்.
நிலநடுக்கம் காரணமாக 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 120 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீட்புப்படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.