தொடர்ச்சியாக ஸ்மார்ட் கைப்பேசிகளில் பல்வேறு புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுவருகின்றன.
இவற்றின் வரிசையில் தற்போது ஒரு கைப்பேசியில் இரண்டு திரைகளைப் பயன்படுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கான பிரத்தியேக திரையினைக்கொண்டு கேஸினை கெஸ்ட்ஆவாய் எனும் நிறுவனம் தயாரித்துள்ளது.
இதன் மூலம் இரு திரைகளிலும் ஒன்றிற்கு மேற்பட்ட வெவ்வேறு அப்பிளிக்கேஷன்களை பயன்படுத்த முடியும்.
ஒரு திரையில் உள்ள விடயத்தை நகல் செய்து மற்றைய திரையில் பிரதி பண்ணல் மற்றும் கோப்புக்கள், புகைப்படங்களை கையாளல் என்பனவற்றினையும் இலகுவாக மேற்கொள்ள முடியும்.
ஒரு திரையினை பெரிய விசைப்பலகை ஆக பயன்படுத்திக்கொள்ளக்கூடியதாக இருத்தலும் விசேட அம்சமாகும்.குறித்த மேலதிக திரையின் அனைத்து வசதிகளையும் வெளிப்படுத்தும் வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.