தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான ஜோதிகா தற்போது கார்த்தியுடன் இணைந்து நடிக்கின்ற படத்தினைத் தொடர்ந்து பொன்மகள் வந்தாள் படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த படத்துக்கு பிறகு கத்துகுட்டி படத்தை எடுத்து பிரபலமான இரா.சரவணன் இயக்கும் படத்தில் ஜோதிகா நடிப்பது உறுதியாகி உள்ளது.
இந்த படத்தில் இயக்குனரும் நடிகருமான சசிகுமார் நடிக்கிறார். சசிகுமார் அண்ணனாகவும், ஜோதிகா தங்கையாகவும் நடிப்பதாக கூறப்படுகிறது.
சமுத்திரக்கனி, சூரி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். இம்மாதம் இறுதியில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.