‘பரியேறும் பெருமாள்’ படத்துக்கு பிறகு கதிர் கதாநாயகனாக நடித்துள்ள படம் ’ஜடா’.
தமிழகத்தைச் சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீரர் ஒருவனின் வாழ்க்கையில் நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகளையும், சமூகத்தில் நடக்கும் பிரச்சினைகளையும் பேசும் வகையில் ‘ஜடா’ படம் உருவாகிறது.
கதிருக்கு ஜோடியாக ரோஷினி நடிக்க, யோகி பாபு, சமுத்திரகனி, ஏ.பி.ஸ்ரீதர் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
டிசம்பர் 6ம் திகதி படம் வெளிவரவுள்ளதாக தெரிவித்துள்ள படக்குழு ஜடா படத்தில் யோகிபாபுவின் கதாபாத்திரம் குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.
கால்பந்தாட்ட உலகின் ஜாம்பவானாக திகழும் மெஸ்ஸி எனும் பெயரில் யோகிபாபு நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இவர் சமீபத்தில் வெளியான பப்பி மற்றும் பிகில் படங்களில் கால்பந்து வீரராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.