இந்து விரோதிகள் என கூறி திமுகவின் வளர்ச்சியை தடுத்துவிடலாம் என்பது அரதப்பழசான சிந்தனை என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
கந்த சஷ்டி விவகாரத்தில் கறுப்பர் கூட்டம் அமைப்புக்கு திமுக ஆதரவு அளிப்பதாக டுவிட்டரில் போலி தகவல் பதிவிடப்பட்டதாக என்று ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டி இருந்தார்.
இந்த நிலையில் இதுதொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திமுகவை இந்து விரோதி என சித்தரிக்க முயற்சி. இந்து விரோதிகள் என கூறி திமுகவின் வளர்ச்சியை தடுத்துவிடலாம் என்பது அரதப்பழசான சிந்தனை.
பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பி ஓபிசி இட ஒதுக்கீட்டை ஒழிக்க முயற்சி நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.