தொடர்ந்து 7 நாட்கள் எலுமிச்சை ஜூஸ் குடித்தால் ஏற்படும் நன்மைகள் ஏராளம!

download 16
download 16

எடையைக் குறைப்பது முதலாக புற்றுநோயை தடுப்பது வரையிலாக எல்லா வகையான வீட்டு வைத்திய முறைகளிலும் இந்த எலுமிச்சை சாறு மருந்தாகவும் உணவாகவும் பயன்படுத்தப்படுகின்றன.

எந்தவொரு பானத்தையும் ஒருமுறை குடிப்பதால் மட்டுமே நம்முடைய உடல் ஆரோக்கியம் மேம்பட்டு விடாது என்பது தான். அதனால் நீங்கள் நிச்சயம் எலுமிச்சை ஜூஸ் குடிக்க வேண்டும்.ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், எலுமுிச்சை ஜூஸ் தயாரிக்கத் தெரியாதவர்கள் யாரும் இருக்கவே முடியாது. நமக்குத் தேவையான எலுமிச்சையை சாறு பிழிந்து எடுத்துக் கொண்டு அதில் அவரவர் விருப்பத்துக்கு ஏற்றபடி, புதினா, தேன் மற்ற சில பழச்சாறுகள் கூட கலந்து குடிக்கலாம். சர்க்கரை வேண்டாமென்றால் உப்பு சிறிது சேர்த்துக் கொள்ளலாம். முடிந்தவரை சர்க்கரை இல்லாமல் குடிப்பது மிகவும் சிறந்தது

.எலுமிச்சை ஜூஸை நாம் ஒவ்வொருவரும் ஒரு மாதிரி தயார் செய்யலாம். ஆனால் ஊட்டச்சத்து நிபுணர்களிடம் கேட்டால் அவர்கள் ஊட்டச்சத்து அளவுகளுக்கு ஏற்றபடி எலுமிச்சை ஜூஸ் எப்படி தயாரிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அதை பார்ப்போம் .

வெதுவெதுப்பான தண்ணீரைக் கொஞ்சம் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் அரை எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்துவிட்டு, அந்த எலுமிச்சையின் தோலையும் அதிலேயே போட்டு குடிக்கலாம்.

எலுமிச்சையின் தோலில் நிறைய பாலிபினைல்கள் இருப்பதால் அவை வெந்நீரில் இறங்க ஆரம்பிக்குமாம். அதிலுள்ள ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் உடல் எடையைக் குறைக்க உதவி செய்யும். பொதுவாக குளிர்ந்த நீரில் எலுமிச்சையை சேர்ப்பதை விடவும் வெந்நீரில் சேர்க்கின்ற பொழுது தான் பாலிபினைல்கள் அதிக அளவில் கிடைக்குமாம்.

ஒரு நாளைக்கு எத்தனை முறை இந்த எலுமிச்சை நீரைக் குடிக்க வேண்டும். கேட்டால் ஆச்சர்யப்படுவீர்கள். ஒரு நாளைக்கு கிட்டதட்ட மூன்று முதல் ஏழு முறை எலுமிச்சை தண்ணீரைக் குடிக்கலாம்.

பிரஷ்ஷான எலுமிச்சை நீரை குடித்தால் நம்முடைய சுவாசம் புத்துணர்வாக இருக்கும்.

சாப்பிட்டு முடித்ததும் கொஞசம் எலுமிச்சை தண்ணீர் குடிப்பது சிறந்து. குறிப்பாக, வெங்காயம், பூண்டு, சீஸ், மீன் ஆகியவற்றை சாப்பிட்ட பின் கட்டாயம் வாயில் ஒருவித மணம் வெளிப்படும். அதைப் போக்க எலுமிச்சை தான் சிறந்த வழிகளாகும்

சிலருக்கு உணவுப் பண்டங்களைப் பார்த்தாலோ சாப்பிட்டாலோ அல்லது சாதாரணமாகவே சலைவாய் உற்பத்தி நிறைய இருக்கும். சிலருக்கு சலைவாயே வராது. சலைவாய் நம்முடைய ஜீரண சக்தியைத் துரிதப்படும் அற்புத மகத்துவம். எலுமிச்சை தண்ணீர் குடித்து வந்தால் சலைவாய் உற்பத்தியை அது தூண்டுமாம்.

காலையில் தூங்கி எழுந்திருக்கும் போது நம்முடைய வாய் மிக வறட்சியாக இருக்கும். அந்த சமயங்களில் பாக்டீரியா உற்பத்தி அதிகமாகும். அதனால் தான் வெறும் வயிற்றில் வெதுதெவதுப்பான நீரில் எலுமிச்சை கலந்து குடிப்பது அவசியமாகிறது.

எலுமிச்சை தண்ணீரை தினமும் குடித்து வந்தால் மிகவும் இளமையுடன் இருக்கலாம். சருமம் புத்துணர்வு பெறும். சருமத்தை நீரோட்டமாக வைத்திருக்க உதவும். உடலில் உள்ள நச்சுக்களை வியர்வையின் வழியாக வெளியேற்றி, இளமையாக வைத்திருக்கும் சருமச் சுருக்கங்களை நீக்கும் ஆற்றல் கொண்டது.

மிக வேகமாக உடல் எடையைக் குறைக்க வேண்டுமென நினைப்பவர்களுக்கு முதல் சாய்ஸ் எலுமிச்சை தண்ணீர் தான். இதில் உள்ள பாலிபினைல் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் உடல் எடையை அதிகரிக்க விடாமல் தடுக்கிறது. அதிக கொழுப்பு குறைந்த கார்போஹைட்ரேட் கொண்ட டயட்களில் கூட உடல் எடையை வேகமாகக் குறைக்க எலுமிச்சை தான் பயன்படுத்தலாம்.

ஆண், பெண் இருவருக்குமே சிறுநீரகத் தொற்றுக்கள் வந்தால் படாத பாடு பட வேண்டியிருக்கும். அதிலும் குறிப்பாக கோடை காலத்தில் சூடு பிடிப்பது அதிகமாகும். ஆனுால் அடிக்கடி எலுமிச்சை தண்ணீர் குடித்து வந்தால் சூடு பிடிப்பது குறைந்து சிறுநீரகத் தொற்றுக்கள் ஏற்படாமல் தடுக்கலாம்

சிறுநீரகக் கற்களால் ஆண்களுக்கு எவ்வளவு பாதிப்புகள் ஏற்படும் என்பது நமக்கு நன்கு தெரிந்தது. ஆனால் தொடர்ந்து நீங்கள் எலுமிச்சை தண்ணீரைக் குடித்து வந்தீர்கள் என்றால் அது சிறுநீரகக் கற்கள் உண்டாகாமல் பாதுகாக்குமாம்