நாட்டில் கொரோனா காரணமாக மேலும் ஒருவர் மரணமானார். வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்த 45 வயதான ஒருவரே மரணமானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் அவர் மரணித்துள்ளார்.
கொரோனா காரணமாக ஏற்பட்ட நிமோனியா மற்றும் நீண்ட கால சிறுநீராக தொகுதி கோளாறு காரணமாக அவர் மரணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய இலங்கையில் ஏற்பட்டுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 195 ஆக அதிகரித்துள்ளது.