அரசாங்கம் ஒரு தீர்மானத்தை எடுத்தால் அமைச்சர்கள் அந்த தீர்மானத்துடன் இருக்க வேண்டும் – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

z p03 johnston
z p03 johnston

ஜனாதிபதியும், அரசாங்கமும் ஒரு தீர்மானத்தை எடுத்தால், அமைச்சர்கள் அனைவரும் அந்த தீர்மானத்துடன் ஒன்றாக இணைந்திருக்க வேண்டும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அப்படி செய்யாது வேறு நோக்கங்களின் பின்னால் செல்ல முயற்சிப்பது பெரிய அழிவை ஏற்படுத்தக்கூடும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதி அவர்கள் தீர்மானம் ஒன்றை எடுத்தால், அரசாங்கம் ஒரு தீர்மானத்தை எடுத்தால், அமைச்சர்கள் அனைவரும் அந்த தீர்மானத்துடன் இணைந்திருக்க வேண்டும். அதனை விடுத்து, பறக்கும் பட்டங்ளை உருவாக்கி, அதன் ஊடாக சென்றால் மிகப் பெரிய அழிவு ஏற்படும்.

எதிர்க்கட்சிகள் பறக்கும் பட்டங்களை அனுப்புகின்றன. வெற்றி பெற்று ஜனாதிபதி அந்த பதவிக்கு கொண்டு வந்தது இந்த நாடு.

பிரதமரை நியமித்து அரசாங்கத்தை அமைத்து சரியான முடிவுகளை எடுக்கும் போது, அந்த தீர்மானங்களுடன் இருக்க வேண்டும்.

பௌத்த பிக்குகள் தலைமையேற்று ஜனாதிபதி மற்றும் எமக்கு ஆலோசனைகளை வழங்குதை தவறான நான் காணவில்லை.

எனினும் சில நேரங்களில் பௌத்த பிக்குகள் சிலரை தூண்டி விடுகின்றனர். இந்த விடயத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டும்” எனவும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளளார்.