ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஜனாதிபதி ஆணைக்குழுவை நிராகரிக்கும் சுமந்திரன்

IMG 20210130 190340
IMG 20210130 190340

ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஜனாதிபதி ஆணைக்குழுவை நிராகரிக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பேச்சாளருமாகிய எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசு கட்சியின் அரசியல் குழு கூட்டம் நிறைவு பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்..

இன்றைய கூட்டத்தில் விஷேடமாக வடக்கு கிழக்கு மாகாணத்தில் தமிழர் பகுதிகளில் நில அபகரிப்பு வெவ்வேறு வடிவங்களில் இடம் பெறுகின்றது. பல்வேறு சட்டங்களை பாவித்து எங்களுடைய மக்களின் வழிபாட்டு தலங்களை மாற்றியமைக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

IMG 20210130 151725 1

 யாழ்ப்பாணத்தில் தற்போது நில அபகரிப்பில் ஈடுபட்டு இருக்கிறார்கள் தொல்லியல் திணைக்களம் வருகை தந்து அடையாளப்படுத்தி வருகின்றது ஆராய்ச்சி செய்கின்றது இதை தடுப்பது பற்றி தமிழ்தேசிய கட்சிகள் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் முடிவெடுக்கப்பட்டது.

 
 வட கிழக்கு சிவில் அமைப்புக்கள் மத ஸ்தாபனங்கள் இப்பொழுது பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணினை  அரசியல் கைதிகள் விடையம், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் , நீண்டகால பிரச்சினைகள் மற்றும்  ஜனாசா எரிப்பு விவகாரம்,மலையக மக்களின் 1000ரூபாய் சம்பள விவகாரம் தொடர்பாக நீண்ட பட்டியல் தொடர்பாக சிவில் அமைப்புகளின் , போராட்டத்திற்கு அரசியல் கட்சி என்ற வகையில்  தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவினை வழங்கவேண்டிய பொறுப்பு உள்ளது.

IMG 20210130 190409


எதிர்வரும் ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தொடர் சம்பந்தமாகவும், மூன்று கட்சிகள் சேர்ந்து அனுப்பிய கடிதம் சம்பந்தமாகவும் இன்று கலந்துரையாடினோம் இது முக்கியமான ஒரு விடையம் இந்த ஒற்றுமை தொடர் வேண்டும் கடந்த காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்று செயற்பட்டோம் தற்போது இரு  தமிழ் தேசிய கட்சிகளின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் இருக்கின்றபடியினால் தமிழ் தேசிய கட்சிகள் என்பதில் ஏனைய இரு கட்சிகளுக்கும் பங்கு உள்ளது . எமது விண்ணப்பத்தை   47 உறுப்பு நாடுகளுக்கு அனுப்பி  வைத்திருக்கின்றோம்.அங்கு இடம்பெறும் தீர்மானம் குறித்து தொடர்ந்து ஆராய இருக்கின்றோம்.


ஜனாதிபதி ஆணைக்குழு என்பது கண்துடைப்பு நாடகம் ஆணைக்குழுக்களின் அறிக்கையை ஆராய இன்னொரு ஆணைக்குழு அவர்களில் எந்தவொரு நம்பிக்கையும் இல்லை உள்நாட்டிலே அனைத்தையும் செய்யுது முடிப்போம் ஐக்கிய நாடுகள் சபையின் தலையீடு தேவையில்லை என்று கடந்த பெப்ரவரி மாதம் கடிதம் மூலம் அறிவித்த அரசாங்கம் இந்த பெப்ரவரி மாதத்திற்கு முன்பதாக ஆணைக்குழுவை நியமித்து உள்ளமை அரசாங்கம் சர்வதேசத்தை முட்டாளாக்குகின்ற விடையத்தை கைவிட்டு நேர்மையாக செயற்பட வேண்டும்.

IMG 20210130 190332


மகிந்த ராஜபக்ச அமைத்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளை நடைமுறைப்படுத்தினாலே எவ்வளவு தூரம் முன்னேறலாம்.இவர்களது ஆணைக்குழுவை சர்வதேசம் ஏற்றுக்கொள்ள போவதேயில்லை.இதனை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை நிராகரிக்கும் என நம்புகின்றோம்.

கடந்த நல்லாட்சி அரசு நல்லிணக்க அடிப்படையில் சிறிய சமிக்ஞைகளை வெளிப்படுத்தியதன் நிமிர்தம் ஜனாதிபதி வேறு திசைகளில் பயணிக்க தயாராகி விட்டோம்  என்ற சமிக்ஞைக்கு ஆதரவாக நானும் (சுமந்திரனனும்) சம்பந்தன் அவர்களும் நல்லெண்ண அடிப்படையில் சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கெடுத்தோம் அந்த அரசின் செயற்பாடுகள் திசை மாறி எங்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மறந்ததன்  காரணமாக நாங்கள் அவ்வாறான நிகழ்வுகளை புறக்கணித்தோம் இனிவரும் காலங்களில் சுதந்திர தின நிகழ்வுகளில் பங்குபற்ற போவதில்லை என குறிப்பிட்டார்.

IMG 20210130 151143

மூடிய அறைக்குள் இடம்பெற்ற கூட்டத்தில் வடமாகாண சபை முதலமைச்சர் வேட்பாளராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவை நிறுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அன்பு கட்டளை இட புன்முறுவலுடன் ஏற்க மதியாபரணம் ஆபிரகாம்  சுமந்திரன் மாவை சேனாதிராஜா உள்ளக பகையை இருவரும் மனம் விட்டு பேசி ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்று ஏனைய உறுப்பினர்கள் கூற ஏற்று செய்தியாளர் சந்திப்பிலும் ஒன்றாக கலந்து கொண்டனர். 


தமிழரசு கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாவை சேனாதிராஜாவை முதலமைச்சர் ஆகுவதற்கு பாடுபடுவதாக கூறியமை குறிப்பிடத்தக்கது.


இந்த அரசியல் குழு கூட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன்,சீன.சிறிதரன் , தவராசா கலையரசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,மாவை சேனாதிராஜா, பொன் செல்வராஜா ,முன்னாள் வட மாகாண சபை அவை தலைவர் சீ.வீ.கே.சிவஞ்ஞானம், முன்னாள் வட மாகாண சபை சுகாதார அமைச்சர் வைத்தியர் சத்தியலிங்கம் ஆகியோர் பிரசன்னமாகி இருந்தனர்.