தீ விபத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு சஜித் நேரடி விஜயம்

sajith
sajith

கொழும்பு, கிராண்ட்பாஸ் – கஜிமாவத்தையில் இன்று அதிகாலை தீ விபத்து இடம்பெற்ற பகுதிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் ஆகியோர் நேரடியாகச் சென்று பார்வையிட்டனர்.

அத்துடன், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தீயினால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு நேரடி விஜயம் செய்து அங்குள்ள தற்போதைய நிலவரம் குறித்து பாதிக்கப்பட்ட மக்களிடம் கேட்டறிந்தார்.

இதன்போது கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களான பால சுரேஷ், மஞ்சுளா, அமைப்பாளர் பத்மநாதன் ஆகியோரும் பாதிக்கப்பட்ட பகுதிக்குச் சென்று பார்வையிட்டனர்.

கஜிமாவத்தை பகுதியில் சுமார் 250 வீடுகள் உள்ளன எனவும், அதில் சுமார் 50 வீடுகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தீயைக் கட்டுப்படுத்த சுமார் 10 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன என்று தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.