இலங்கையில் மேலும் 1,380 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொரோனா கொத்தணி உடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
இன்று இதுவரையில் 2,269 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 138,065 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.