இலங்கையில் மேலும் 687 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணி உடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் நாட்டில் இன்று (24) இதுவரையில் 2,970 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 167,171 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.