கிளிநொச்சி திருநகருக்கு செல்கின்ற பாதை சீரமைக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் குறித்த வீதியில் திருத்த பணிகள் இடம்பெறுவதால் மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
குறிப்பாக கல்விநிலையங்களுக்கு செல்லும் மாணவர்கள், சந்தைக்கு செல்கின்ற பொதுமக்கள் என பலர் குறித்த பாதையை பயன்படுத்துவதாலும் தற்போது குறித்த பாதை புனரமைக்கப்படுகிறது என்பதற்கான சமிஞ்சைகளோ மாற்று வழிகளோ இல்லதாதல் அப் பகுதி மக்கள் தங்களது அன்றாட செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாதுள்ளதாக விசனம் தெரிவிக்கின்றனர்.
மேலும் குறித்த பாதைக்கு முன்பாக முட்கள், தகரங்கள், ஆணிகள், மரக்கட்டைகள் போன்றவற்றையே வீதி தடைகளாக பயன்படுத்துகிறார்கள். அதனால் துவிச்சக்கரவண்டிகளில் செல்லும் பொதுமக்கள் அசௌகரியங்களை எதிர்கொள்வதை காணமுடிகிறது.
ஆகவே குறித்த விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்குரல் நிர்வாகம் கேட்டுக்கொள்கின்றது.