நாட்டின் மரபுரிமைகளை வீணடிப்பதற்கு எவருக்கும் இடமளிக்கப்படமாட்டாது – பிரதமர்

download 2 12
download 2 12

நாட்டின் மரபுரிமைகளை வீணடிப்பதற்கு எவருக்கும் இடமளிக்கப்படமாட்டாது என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தேசிய தொல்பொருள் திணைக்களத்தின் 131 ஆம் வருட நிகழ்வு இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் அலரிமாளிகையில் இடம்பெற்றது.

அங்கு உரையாற்றிய பிரதமர் மகிந்த, நாட்டின் மரபுரிமைகளை பாதுகாக்க வேண்டியது அனைவரினதும் கடமையாகும் என்று தெரிவித்தார்.

இதற்காக அரசாங்கம் எப்போதும் முன்னிலையில் இருக்கும். மரபுரிமைகளை சேதப்படுத்தவோ அழிக்கவோ எவருக்கும் இடமளிக்க முடியாது என்று அவர் தெரிவித்தார்.