நாட்டில் இருக்கும் அனைவருக்கும் கொவிட் தடுப்பூசி ஏற்றுவது அநாவசிய செலவாகும் என வைரஸ் தொடர்பான நிபுணரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
நாட்டில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொவிட் தடுப்பூசி ஏற்றுவதற்கு அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கை தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
60 வயதுக்கு மேற்பட்ட மற்றும் நோய்களால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு கொவிட் தடுப்பூசி மாத்திரம் வழங்குவது போதுமானதாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.