நாம் மீண்டும் முன்பை விட பலமாக எழுந்து வருவோம் – மனோ கணேசன்

 கணேசன்

நாம் மீண்டும் முன்பை விட பலமாக எழுந்து வருவோம் எமது ஆட்சி இடை நின்று விட்டது. அது முடிவு இல்லை. எழுதி வைத்துக்கொள்ளுங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

மலையக சட்டத்துறை மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளுடன் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

எமது நான்கு ஆண்டு ஆட்சிகாலத்தில், அதற்கு முற்பட்ட நாற்பது வருட காலத்தில் நடைபெறாத பல்வேறு வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுத்தோம். எமது மக்கள் வளர்ந்தார்கள். துரதிஷ்டவசமாக  எமது ஆட்சி இடை நின்று விட்டது.

எம்மை அவமானப்படுத்த மட்டுமே பலருக்கு முடியும். ஆகவேதான் எம்முடன் எவரும் விளையாட வேண்டாம் என நான் எப்போதும் எச்சரிக்கிறேன். எம்மை அவமானப்படுத்த நினைப்பவர்களுக்கு பகிரங்கமாகவே நான் பதிலடி கொடுக்கிறேன். நாம் மீண்டும் முன்பை விட பலமாக எழுந்து வருவோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.