ராஜபக்ச அரசில் எவரும் இணைந்து கொள்ள முடியும் – சனத் நிஷாந்த

Sanath Nishantha mp
Sanath Nishantha mp

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான கூட்டு அரசில் அங்கம் வகிக்கும் ஒரு சில பங்காளிக் கட்சிகள் கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கான வாய்ப்பு உண்டு. ராஜபக்ச அரசில் எவரும் இணைந்து கொள்ள முடியும் என இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

பல்வேறு கொள்கையுடைய அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கூட்டணியை அமைத்துள்ளோம்.

இந்தக் கூட்டணியில் பொதுஜன முன்னணியே பிரதான கட்சியாக உள்ளது. கூட்டணிக்குள் கருத்து வேறுப்பாடுகள் பல காணப்படுகின்றன.

அமைச்சுப் பதவிகளையும், இராஜாங்க அமைச்சுப் பதவிகளையும், பெற்றுக் கொண்டுள்ளவர்கள் அரசில் இருக்க விருப்பமில்லையென்றால் தாராளமாக வெளியேறலாம்” – என்றார்.