அரசாங்கம் நினைத்தால் தமிழர்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க முடியும் – இராதாகிருஸ்ணன்

Rathakrishnan
Rathakrishnan

எந்தவொரு பெரும்பான்மை அரசாங்கமும் இதய சுத்தியுடன் தமிழர்கள் பிரச்சினையை தீர்த்து வைப்பதில் அக்கறை காட்டவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர்,

இதுவரை கடந்த 30 வருடங்களாக ஆட்சி செய்த எந்த ஒரு அரசாங்கமும் தமிழர் தரப்பு விடயங்களை இதய சுத்தியுடன் அணுகவில்லை என்பதே கசப்பான உண்மை.

ஆனால் இந்த அரசாங்கம் நினைத்தால் இந்த தமிழர் பிரச்சினைக்கு சரியான தீர்வை பெற்றுக்கொடுக்க முடியும் .காரணம் பெரும்பான்மை பலம் முக்கிய பதவிகளில் உள்ள அனைவரும் ஒரே குடும்ப அங்கத்தவர்கள். ஒரு உணவு மேசையில் பேசி தீர்க்க முடியும். ஆனால் அதனை செய்வார்களா?” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.