தற்போது நாட்டில் நிலவும் உண்மையான நிலையை அரசாங்கம் உடனடியாக வெளிப்படுத்த வேண்டும். போலியான தரவுகளை மக்களுக்கு வழங்குவதை நிறுத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கொரோனா ஆபத்திலிருந்து மக்களைப் பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பாகும்.
மூன்றாவது கட்டமாக வழங்குவதற்கு தேவையான தடுப்பூசிகளை உடனடியாக கொள்வனவு செய்ய வேண்டும். இதுவரையில் தடுப்பூசி வழங்கப்படாதோருக்கு துரிதமாக அதனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
நாட்டுக்கு உண்மையை வெளிப்படுத்தும் பொறுப்பிலிருந்து அரசாங்கம் தப்பி ஓடக் கூடாது. இந்த பேரழிவை சமாளிக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.