அஜித் நிவாட் கப்ரால் மீண்டும் மத்திய வங்கி ஆளுநராக நியமனம்

Ajith Nivard cabraal
Ajith Nivard cabraal

எதிர்வரும் 15 ஆம்திகதி முதல் அமுலாகும் வகையில் அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கியின் ஆளுநராக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, நாளை மறுதினம் (15) அஜித் நிவாட் கப்ரால் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரேஷ்ட பட்டய கணக்காளரான இவர், இதற்கு முன்னதாக அமைச்சின் செயலாளராகவும் கடமையாற்றியுள்ள இவர் சுமார் 9 வருடங்கள் மத்திய வங்கியின் ஆளுநராகவும் பதவி வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.