துரோகிகள் என குறி வைக்கப்பட்டவர்களும் கூட்டமைப்பில் உள்ளனர் – மனோ

mano 1
mano 1

விடுதலைப் புலிகளால் துரோகிகள் என குறி வைக்கப்பட்டு தேடியழிக்கப்பட்ட கட்சியியினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

யாழில் அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட விடயம் குறித்து வெளியாகியிருந்த செய்திக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் தமிழீழ விடுதலை புலிகளால் கூட்டமைக்கப்பட்ட அமைப்பே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றும் அவர் தெரிவித்தார்.

2009 ஆம் வருட இறுதிப்போர் வரை மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துடன் இருந்தவர்களும், இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கின்றார்கள் என தெரிவித்தார்.

காலத்தின் கட்டாயத்தினாலேயே ஆயுதப்போர் இடம்பெற்றது என சுட்டிக்காட்டிய மனோ கணேசன், அதில் எது தவறு எது சரி என தீர்ப்பு வழங்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.