இலங்கையை நாடகமாட எவரையும் அனுமதிக்க மாட்டோம் – சஜித்

பிரேமதாச

புவிசார் அரசியலில் இலங்கையை விளையாட்டுக் களமாக மாற்றுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எவருக்கும் இடமளிக்காது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

காசல் வைத்தியசாலைக்கு வைத்திய உபகரணங்களை வழங்கி வைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “சீன உரம் கொண்ட கப்பல் எவ்வாறு இலங்கை கடற்பரப்பிற்குள் ஊடுருவியது என்பது எமக்கு ஆச்சரியமாக உள்ளது.

அது எவ்வாறு சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் பிரவேசித்தது? எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட எவரையும் ஐக்கிய மக்கள் சக்தி அனுமதிக்காது.

இலங்கையை நாடகமாட எவரையும் அனுமதிக்க மாட்டோம்” என அவர் மேலும் கூறினார்.