நான் அரசியலில் இருந்து முழுமையாக விலகுவேன் – மஹிந்தானந்த

Mahindananda Aluthgamage
Mahindananda Aluthgamage

நான் அரசியலில் இருந்து முழுமையாக விலகுவேன் என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் என்று இரசாயன உர இறக்குமதி நிறுவனங்களால் வீண் அச்சத்தை தோற்றுவிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அவ்வாறு நாட்டில் எவ்வித உணவு தட்டுப்பாடும் ஏற்படப் போவதில்லை.

என்னுடைய உருவப்படங்கள் வைக்கப்பட்ட கொடும்பாவிகள் எரிக்கப்படுகின்றன. அவற்றுக்கு இலைகளை ஊட்டுகின்றனர். விவசாயிகள் எந்த இடத்திலும் இவ்வாறு நடந்து கொள்ள மாட்டார்கள்.

இதன் பின்னணியில் அரசியல் சூழ்ச்சி இடம்பெறுகிறது. இவ்வாறு எதனை செய்தாலும் நாம் முன்னெடுத்துச் செல்லும் மாற்றம் சரியானது என்பது எனது மனசாட்சிக்கு தெரியும்.

அரசாங்கத்திற்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்ற போதிலும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக எவ்வித ஊழல் – மோசடி குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படுமாயின் நான் அரசியலிலிருந்து முழுமையாக விலகுவேன் என்றார்.