சீனா இலங்கை மீது ஒரு சத்தம் இல்லாத யுத்தம் ஒன்றினை மேற்கொண்டு வருகின்றது- ஜநாயக போராளிகள் கட்சியின் செயலாளர்

IMG 1845
IMG 1845

ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர். (19.12.21) இன்று முல்லைத்தீவு ஊடக மையத்தில் ஊடக சந்திப்பு ஒன்றினை நடத்தி தற்போதைய வடக்கின் சீனா தூதுவரின் பயணம் தொடர்பில் தமிழ்களின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மை நாட்களில் வடமாகாணத்தில் சீனத்தூதுவரின் வருகை செயற்பாடுகள் தொடர்பிலும் தமிழ் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களின் கருத்துக்களையம் மக்கள் அறிந்துகொள்ளவேண்டிய தேவை உள்ளது.
சீனாவின் இலங்கை மீதான ஆக்கிரமிப்புக்கள் தொடர்பில் முன்னர் நாங்கள் கருத்துக்களை சொல்லிவந்துள்ளோம்.

சீனா இலங்கை மீது ஒரு சத்தம் இல்லாத யுத்தம் ஒன்றினை மேற்கொண்டு வருகின்றது. அதன் விளைவுகள் மிக பாரதூரமாக தமிழர் தாயகத்தில் அமையும் என்பதையும் தெளிவாக கூறியுள்ளோம்
சீனாவின் அடுத்த கட்ட நகர்வு இலங்கையில் தமிழர் தாயகத்தில் வடமாகாணத்தினை கைப்பற்றும் நோக்குடன் இலங்கை அரசின் அமைச்சு பொறுப்புக்களில் இருக்கின்ற அரசியல் கட்சிகளின் அனுசரணையுடன் வடமாகாணத்தில் கால்பதிக்க நினைக்கின்றது சீனா


சீனா உலகத்தில் எந்த நாடுகளில் அபிவிருத்தி என்ற போர்வையில் சென்றுள்ளதோ அந்த நாடு அபிவிருத்தி அடைந்ததாக வரலாற்றில் நான் கண்டதில்லை மாறாக அந்த நாடுகள் சீனாவிடம் அடிமைப்படுத்தப்பட்டு பொருளாதாரரீதியாக வளர்ச்சியடையமுடியாமல் பின்னடைவினை நோக்கி சென்று நாடு முன்னேற்றம் கண்டதாக நாங்கள் அறிந்ததில்லை.

இலங்கையும் ஒரு மிக மோசாமான பொருளாதார நெருக்கடியினை சந்திக்கக்கூடிய நிலையில் இன்று சீனாவின் பக்கம் சாய்ந்து நிக்கின்றது இந்த நிலமையினை சீனாவே உருவாக்கி நிக்கின்றது.

இது தொடர்பில் தமிழர்கள் தரப்பினை சார்ந்த மக்கள் பிரதிநிதிகள் மௌனமாக இருக்கின்றார்கள் சீனாவிற்கு எதிராக பலமான எதிர்பினை கொடுக்க தாமதித்து வருகின்றார்கள்.


அண்மையில் சீனத்தூதுவர்,யாழ்,மன்னார் மாவட்டங்களுக்கு சென்று கேந்திரமுக்கியத்துவம்வாய்ந்த இடங்களை பார்வையிட்டு சென்றுள்ளார் அந்த இடங்களில் வளங்களை ஒளிப்பதிவுசெய்து எமது வளங்களின் ஆக்கிரமிப்பினை எவ்வாறு செய்யலாம் என்ற திட்டத்தினை ஆரம்பித்துவைத்துள்ளார்கள்.

பருத்தித்துறை என்பது மிக முக்கியமான முனை அது ஒரு துறைமுகம் யாழ்ப்பாணத்திற்கும் இந்தியாவின் வேதாரணியத்திற்கும் மிக அண்மையாக இருக்கின்றது எங்களுக்கு மட்டுமல்ல இந்தியாவிற்கும் ஒரு அச்சுறுத்தலை சீனா கொடுப்பதாகத்தான் நாங்கள் கருதுகின்றோம் இந்த செயற்பாடு எதிர்காலத்தில் மிகமோசமான பாரதூரமான விளைவுகளை தமிழர் தாயகத்தில் ஏற்படுத்தும்.

மன்னாருக்கு சென்று இராமர் பாலம் வரை சீனத்தூதர் சென்றுள்ளார் வடமதகாண அபிவிருத்திக்காக இராமர் பாலத்தினை சென்று பார்க்கவேண்டிய தேவை அவருக்கு இல்லை இதுவும் இந்தியாவிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் செயற்பாடகத்தான் இருக்கின்றது.

எனவே இந்தியாவி;ன் நலன்சார்ந்த விடயத்தில் ஈழத்தமிழர்கள் அக்கறையுடன் இருக்கவேண்டிய தேவை இப்போது இருக்கின்றது.

உலகத்தில் தமிழ்மக்களுக்கு ஒரு தீர்வினை வழங்கவேண்டும் ஒரு அங்கிகரிக்கப்பட்ட ஒரு இனமாக வடகிழக்கில் வாழ்கின்ற தமிழர்கள் சம உரிமையுடன் இலங்கைத்தீவில் வாழ அதற்கான திட்டவரைபுகளை உருவாக்கி இலங்கையின் அரசியல் யாப்பில் புதிய நடைமுறைச்சட்டத்தினை கூட கொண்டு வந்தது இந்தியாதான் இந்தியாவின் அனுசரணையும் ஆதரவும் தொடர்ச்சியாக ஈழத்தமிழர்களுக்கு தேவையாக உள்ளது.


ஈழத்தமிழர்களை இந்தியாவினுடைய உறவுமுறையில் இருந்து பிரித்தெடுப்பதற்காக அந்த உறவினை சிதைப்பதற்காக அபிவிருத்தி என்ற போர்வையில் சீனா மக்களுக்குள் புகுந்துள்ளது.

இலங்கையின் கடற்தொழில் அமைச்சர் அவர்கள் சீனாவினை இங்கு கொண்டு வந்து விட்டுள்ளார் சீனாவுடன் முழுமையாக இணைந்து வேலை செய்கின்றார்.கடற்கரை சமூகம் ஊடாக சீனாவின் கைகளுக்குள் சிக்கக்கூடிய ஆபத்தான நிலமையும் இங்கு இருக்கின்றது.


நாங்கள் எங்களிடம் இருக்கின்ற வளங்களை வைத்துக்கொண்டு அதனை பலமாக பல்மடங்காக வளர்த்தெடுப்பதற்கான முயற்சியினை சுயமாக சிந்திக்கவேண்டியவர்களாக இருக்கவேண்டும்.

வேறு உதவித்திட்டங்களுக்காக மாற்று கட்சிகளுடனும் அதனுடன் நிக்கும் தமிழ்தேசியத்திற்கு எதிரானவர்களுடன் நாங்கள் இணைந்து செயற்படுவதால் இருக்கின்ற பொருளாதாரம் சுறண்டப்படும் நாங்கள் கடனாளிகாளாக மாற்றப்பட்டு எதிர்காலத்தில் ஒரு சமூகம் முற்றுமுழுதாக அழிந்து போவதற்கான சாத்தியப்பாடு இங்கு உருவாகும் மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

யாழ்மாவட்டம் தமிழர்களின் கலாச்சார ரீதியான தலைநகரம் அங்கு வந்து யாழ் மாநாகர சபை  அவர்களும் தமிழர்களின் தேசியத்திற்கு எதிரானவர்களுடன் இணைந்து ஆட்சியமைத்துள்ளார்கள். அந்த ஆட்சி அதிகாரங்களில் இருக்கின்றவர்கள் சீனாவின் கைகளுக்குள் சிக்கக்கூடிய சந்தர்ப்பம் உருவாகியுள்ளது அவர்கள் அந்த நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

தமிழர்களின் வரலாற்று மையம் என்று சொல்லக்கூடிய யாழ் நூலகம் அந்த யாழ் நூலகத்திற்கே சீனத்தூதுவர் சென்றபோது யாழ் மாநாகரசபையின் முதல்வர் அங்குசென்றிருந்தார் எதிர்காலத்தில் யாழ் மாநாகரசபையின் அபிவிருத்திகள் தொடர்பில் யாழ்நூலகத்தின் அபிவிருத்திகள் தொடர்பில் சீனாவிடம் தாங்கள் உதவிகள் கோரியுள்ளதாக சொல்லியுள்ளார்கள்.

இது முற்றுமுழுதாக தமிழர்களின் தலையில் இடிவிழுந்த செய்தியாகத்தான் நாங்கள் பார்க்கின்றோம் யாழ் நூலகம் எரிக்கப்பட்ட காலம் தமிழர்களுக்கு ஒரு சாபக்கேடான நாளாகத்தான் பார்கின்றோம் இன்று சீனாவந்து யாழ் நூலகத்திற்குள் சென்றுள்ளது என்றால் அவும் ஈழத்தமிழர்களுக்கு ஒரு சாபக்கேடான நாளாகத்தான் பார்க்கின்றோம்

இதற்கு எங்கள் தமிழ் அரசியல் வாதிகள் துணைபோய் நிக்கின்றார்கள் சீனவின் திட்டம் என்பது ஓராண்டு ஈராண்டு திட்டம் அல்ல ஜந்து தசாப்த்தங்களுக்கு மேலான மிகப்பெரும் திட்டமுடன் சீனா வந்து நிக்கின்றது.

தமிழ் மக்களின் நில ஆக்கிரமிப்பு அதன் ஊடாக சிங்கள குடியேற்றங்களை எவ்வாறு இங்கு நிறுவலாம் என்ற இலங்கை அரசாங்கத்தின் திட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் சீனாவின் அபிவிருத்தி திட்டமும் சீனாவின் வருகையும் இங்கு அமைந்துள்ளது.

இந்த இரண்டு விடையங்களும் நிறைவேற்றப்படுமாக இருந்தால் இலங்கை ஒரு தனி பௌத்த நாடாக மாறும் தமிழர்களின் தாயககோட்பாடு,தாயகம்,தேசியம் அனைத்துமே சிதைக்கப்படும் தமிழர்கள் உலகத்தில் ஏதிலிகளாக தொடர்ந்து வாழவேண்டிய நிலைக்குள் தள்ளப்படுவோம்.

எனவே எங்கள் மக்கள் எதிர்காலத்தில் புரிந்துகொள்ளவேண்டியது அரசியல் ரீதியாக உங்கள் தெரிவாக இருந்தாலும் பொருளாதா ரரீதியிலான தெரிவாக இருந்தாலும் சரி எந்த விடையங்களாக இருந்தாலும் எங்களின் சுயர்நிர்ணய அடிப்படை ரீதியில் எந்தகொள்கையாக இருந்தாலும் தமிழர்களின் தேசிய நலன்சார்ந்த கொள்கைளுடன் செயற்படுபவர்களை நீங்கள் அரவணைத்துக்கொண்டு புத்திசாலித்தனமான திறமைவாய்ந்த எத்தனையோ பேர் மக்களுக்குள் ஒளிந்துள்ளார்கள் அவர்களை வெளியில் கொண்டு வந்து எங்கள் மக்களை நாங்களே ஒரு தேசிய இனமாக பலமாக கட்டிஅமைக்கக்கூடிய பொருளாதார வளர்சியினை ஏற்படுத்தக்கூடிய நபர்களை எதிர்காலத்தில் தெரிவுசெய்யவேண்டும் என்பதில் தெளிவாக இருக்கவேண்டும்.

இன்று எங்கள் இனம் எல்லா வகையிலும் அடக்கப்பட்டுள்ளது மீளமுடியாத சிதைக்கப்டப்ட கட்டமைப்பாக இருக்கின்றோம் பத்து கட்சிகள் இருக்கலாம் ஆனால் தேசிய ரீதியில் மக்களின் கொள்கை ரீதியில் எந்த கட்சிகளும் மக்களுடன் ஒன்று பட்டு செயற்படக்கூடியவாறு இல்லை மாறாக மறைமுகமாக மாற்றானுடன் கைகோர்த்து தங்களின் அரசியல் இருப்புக்களை தக்கவைத்துக்கொண்டு தாங்கள் மக்களின் தலைவர்களாக காட்டிக்கொள்வதற்காக இங்கு அரசியலில் செயற்படுகின்றார்களே தவிர ஆனால் மக்களின் கொள்கை ரீதியான எந்த விடையங்களிலும் முன்னுதாரணமா செயற்பட்டதை காணமுடியவில்லை.

நாங்கள் தெளிவா ஒரு விடையத்தினை சொல்கின்றோம் வடகிழக்கு இணைந்த தாயக பகுதியில் சீனாவின் ஆதிக்கம் என்பது வேகமாக இரகசியமான முறையில் நகர்த்தப்பட்டுக்கொண்டிருக்கின்றது. இதனை அனைவரும் ஒன்றிணைந்து தடுத்து நிறுத்த வேண்டும் இல்லையெனில் தமிழ்தேசிய இனத்திற்கு பேரளிவு ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தபோது

ஊடகவியலாளர் சீனாவின் ஆதிக்கம் தொடர்பில் இந்தியாவிற்கு என்செய்தியினை நீங்கள் முன்னால் போராளிகள் கட்சி என்றரீதியில் சொல்ல விரும்புகின்றீர்கள் என்று கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில்.

இந்தியா இந்த விடையத்தில் மிகத்தெளிவாக மிக வேகமாக முடிவெடுக்கவேண்டும் மௌனமாக இருக்குமாக இருந்தால் சீனாவின் ஆக்கிரமிப்பு தமிழர் தாயக பகுதிகளில் மிக வேகமாக பரவி  வருகின்றது அதனால் இந்தியாவிற்கு பேராபத்திற்கு  இருக்கின்றது உண்மையில் வடமாகாணத்தினை சீனா ஆக்கிரமிப்பதன் நோக்கம் இந்தியாவினை கண்காணிப்பது அச்சுறுத்தல் விடுவது இலங்கையின் வளங்களை சீனா சுறண்டிக்கொள்வதற்கு வடகிழக்கில் இந்தியா தடையாக இருக்கின்றதோ அந்த தடையினை வடகிழக்கில் இருக்கின்ற தமிழ்மக்களை தமக்கு சார்பாக மாற்றி உடைத்தெறிந்து இந்தியாவினை கண்காணித்து இந்தியாவிற்கு அச்சுறுத்தல் விடுவதுதான் சீனாவின் நோக்கம்
இதனை மிகவேகமாக வடகிழக்கில் இருக்கின்ற தமிழ் அரசியல் கட்சிகளுடன் பேசி இந்தியா தீவிரமான முயற்சிகளில் ஈடுபடவேண்டும் இந்தியா தாமதிக்குமாக இருந்தால் கவலைக்குரிய விடையமாக மாறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்