மலையக மக்களின் அபிலாசைகளை உள்ளடக்கிய கடிதம் இறுதி கட்டத்தில்

Manoganeshan
Manoganeshan

மலையக மக்களின் அபிலாசைகளை உள்ளடக்கி பல்வேறு தரப்பினருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ள கடிதம் இன்றைய தினம் இறுதி செய்யப்படவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இந்தவிடயம் தொடர்பில், கொழும்பில் இன்று (21) மாலை கூடி ஆராயவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த கடிதம் இந்தியப் பிரதமர், பிரித்தானிய அரசாங்கம் உள்ளிட்ட தரப்புக்கு அனுப்பப்படுவதுடன், இலங்கையின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டவர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.