இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ராஜினாமா செய்துள்ளார் என்ற தகவல் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன இதனை சற்று முன்னர் அறிவித்துள்ளார்.
முன்னதாக, எதிர்ப்புகளை அடுத்து மாலைதீவின் ஊடாக சிங்கப்பூரை நேற்று சென்றடைந்த அவர் தமது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்தார்.
இதேவேளை சபாநாயகர் நாளை 16ஆம் திகதி நாடாளுமன்றை கூட்டவுள்ளார்.