‘துரோகச்சாயல் தெரிந்தால் தலைவன் மரணத்தை பரிசளிக்கட்டும்’ – காண்டீபன்

.jpeg
.jpeg

‘நான் உதிர்த்த வார்த்தைகள் மூலம் என் ஆழ் மனதில் எங்கேனும் ஓர் மூலையிலாவது துரோகத்தின் சாயல் துளிர்விடும் ஆயின் விடுதலை வேள்வியில் ஆகுதி ஆகிய எங்கள் மறவர் தியாகங்கள் என்னை நிச்சயம் காவு கொள்ளட்டும். நான் என் இனத்துக்கு நேர்மையான உண்மையான அரசியலை செய்யவில்லை என்றால் என்னை ஆட்கொண்ட என் தலைவன் மரணத்தை எனக்கு பரிசளிக்கட்டும்.’ என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் ந.காண்டீபன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் தொலைக்காட்சி விவாதமொன்றில் தலைவர் பிரபாகரனை ஒருமையில் விழித்ததுடன், புலிகளுடன் பணம் கொடுத்து பசில் ராஜபக்ச டீல் செய்தார் என்று சர்ச்சைக்குரிய விதமான கருத்தையும் தெரிவித்திருந்தார். இவரின் இக்கருத்துகளுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். மாநகரசபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் உட்பட பல தரப்பினரிடமிருந்தும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.

இந்நிலையில் இரண்டு நாட்களுக்குப் பின்பு தலைவர் பிரபாகரனை ஒருமையில் விழித்தமை தொடர்பான விளக்கம் ஒன்றை தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். ஆனால் பசில் புலிகளுக்கு பணம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டுக்கு அவர் பதிலளித்திருக்கவில்லை.

காண்டீபனின் முகநூல் பதிவு :