தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 616 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு புதிதாக அடையாளம் காணப்பட்ட நோயாளிகளுடன் சேர்த்து தமிழகத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 18 ஆயிரத்து 594 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக மாநிலத்தில் இன்று பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 4 ஆயிரத்து 545 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் சுகாதார துறை அறிவித்துள்ளது.
இதேவேளை கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 65 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தமிழகத்தில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 636 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று 1,747 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சென்னையில் மட்டும் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 71 ஆயிரத்து 230 ஆக உயர்ந்துள்ளது.