கிளிநொச்சி மாவட்டத்திற்குள் வரும் அனைவரையும் தனிமைப்படுத்த தீர்மானம்

625.500.560.350.160.300.053.800.900.160.90 25
625.500.560.350.160.300.053.800.900.160.90 25

கிளிநொச்சி மாவட்டத்தில் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்திற்குள் நுழைபவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட செயலர் திருமதி ரூபாவதி கேதீஸ்வரன் தலமையில் நேற்று காலை 10 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கொரோனா தடுப்பு செயலணியின் கூட்டம் இடம்பெற்றது.

இதன்போதே வெளிமாவட்டத்தில் மாவட்டத்திலிருந்து வருவோர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படவேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.